Menu
Your Cart

பிஸ்கட் நிலாக்கள்

பிஸ்கட் நிலாக்கள்
-5 %
பிஸ்கட் நிலாக்கள்
ஜான் சுந்தர் (ஆசிரியர்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மாதக்கணக்கில் பயணம் தொடர்ந்து, கடைசியில் ஒரு பச்சைச்சோலை கண்ணுக்குத் தெரியும். புதைந்திருந்த பூமியின் இரகசியம் வெளிப்பட்டதைப் போல. எல்லா ஜீவராசிகளும் ஒன்றுகூடி, அந்த நீர்ச்சுனையில் தலைதாழ நீர் அருந்தும். நீர்ப்பிம்பத்தில் புலிக்கு அருகில் மான் இருக்கும். உயிர்நீரை சுரக்கிற அவ்விடத்தில் வேட்டை என்பது நிகழாது. எல்லா உயிர்களும் ஒரு சுயவரையரைக்குள் நிற்கும்போது ஒரு வெப்பவெளி தனது மறைநீரை தந்து, அவைகளின் தாகங்களைப் பெற்றுக்கொள்கிறது. ஏதோவொருவகையில் ஜான்சுந்தர் அண்ணனின் இருப்புருவாக்கும் நிழல்பாதை, நம் எல்லோருக்குமான தாகத்தைப்போக்கும் நீர்ச்சுனைநோக்கி அழைத்துச்செல்லும் என்று நம்புகிறோம். ஜான்சுந்தர் அண்ணனின் சொற்களிலேயே சொன்னால், ‘பூரிக்குள் அடைபட்டிருக்கும் காற்று, தொட்டவுடன் புஸ்சென வெளியேறுவதைப் போல’வே அவருடைய கண்கள் நொடிக்குநொடி குழந்தையாகிக் கொண்டே இருக்கின்றன. குழந்தைகளைப்பற்றி பேசுவதும், குழந்தையாகிப் பேசுவதும் அவருடைய இயல்பாகிவிட்டன. தொலைத்துவிடாத குழந்தமையின் உயிர்த்தருணங்களைப் பேசுவதாகவே ஜான் சுந்தர் அண்ணனின் கவிதைகள் இருக்கின்றன. மீளமீள அந்த அமுதசுரபியிலிருந்தே அவர் பருக்கை எடுக்கிறார். நகலிசைக்கலைஞனாக தனது வாழ்வைத் துவங்கி, அவ்வளவு மனிதர்களையும் அவ்வளவு குரல்களையும் ஞாபகம் வைத்திருக்கும் அந்த இருதயம் ஒரு அன்புத்தொட்டில் தான். ‘பிஸ்கட் நிலாக்கள்’ ஜான் சுந்தர் அண்ணின் கவிதைத்தொகுப்பாக, குக்கூ காட்டுப்பள்ளி தன்னறம்-நூல்வெளியின் மூலம் வெளியீடு கொள்கிறது. அவரிடம் இருந்து வருகிற இச்சொற்கள், நம் அறிவில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றுவதாக இருக்கும். இதுவரை நாம் இறுகப்பிடித்து வைத்திருக்கும் நம் வெற்றறிவுத்தனத்தை அன்பின் நீர்மையால் இக்கவிதைகள் நிரப்பும். கவிதைகளின் உயிர்ப்பை காட்சிகளாக ஆக்கித்தந்திருக்கும் கார்த்திக் பங்காருவின் கருப்பு-வெள்ளை புகைப்படங்கள் கண்விழியை மலரவைக்கிறது.
Book Details
Book Title பிஸ்கட் நிலாக்கள்
Author ஜான் சுந்தர் (Jaan Sundhar)
Publisher தன்னறம் (Thannaram)
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சொந்த ரயில்காரிஜான்சுந்தர் அடிப்படையில் ஓர் இசைக்கலைஞர். இசை துய்க்க மொழி அவசியமில்லையென்று சொல்லப்பட்டாலும், பாட்டில் புழங்கும் ஒருவர் சொற்களின் ரம்யத்தில் மயங்குவது இயல்பானதே. ஜான்சுந்தர் இந்த மயக்கத்தோடே எழுதவும் வந்திருக்கிறார்.தொகுப்பின் அநேக கவிதைகள் குழந்தைகளின் உலகில் நிகழ்பவை. ஜான்சுந்தர் த..
₹67 ₹70
ஜான் சுந்தரின் பியானோ வெட்கமில்லாதது. ஆனால் அவர் சமதளப் படிகளில் இறங்கும் வித்தை தெரிந்த பியானோ கலைஞன். பேருந்தில் நம் மடியில் இருக்கும் மரக் கன்றைத் தயங்கித் தொடும் சிறுமி, ஒரு கணத்தில் அவளைத் தொடத் தளிர்க் கை நீட்டும் மரக்கன்று இரண்டும் அவர்.சடுதியில் ஐந்து மார்புகள் முளைக்கும் பெண்ணின் சித்திரம் ..
₹86 ₹90
ஜான் சுந்தர் கதைகளை வாசிக்கும்போது புலப்படும் முதன்மையான அம்சம் இவற்றில் உள்ளோடும் வெகுளித்தன்மை. தன்னைச் சுற்றி நடப்பவற்றை களங்கமற்ற விழிகளால் காணும் ‘அப்புராணி’ப் பார்வை. இந்த வெகுளித்தனம் கலைகிற நொடியில், அப்பாவிப் பார்வை கூர்ந்தகவனமாக மாறுகிற இடத்தில் நடப்புகள் கதைகளாக உருவம் கொள்கின்றன. இந்த இய..
₹133 ₹140